சீனா: வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சபலென்கா வெற்றி பெற்றார்.
இந்த தொடரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-3, 6-0 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் லாரா செக்மண்டை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா பெகுலாவுடனும், கோகோ காப், பவுலினியுடனும் மோதுகின்றனர்.