
சாம்பியன்ஸ் டிராபி தொடர்பாக துபாயில் நடைபெற்ற ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) செயற்குழு கூட்டத்தில் இன்னும் தீர்வு காணப்படவில்லை. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9, 2025 வரை நடைபெற இருந்தது.ஆனால், பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட மறுத்துவிட்டது.

இந்த போட்டியை பாகிஸ்தானில் மட்டுமே நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கருதுகிறது. இதற்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை பாகிஸ்தானுக்கு வெளியே துபாயில் நடத்த வேண்டும் என ஐசிசியிடம் இந்தியா வலியுறுத்தியது. ஆனால், இந்த நிபந்தனையை பாகிஸ்தான் ஏற்கவில்லை.
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆன்லைனில் ஐசிசி செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார். பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி நேரில் கலந்து கொண்டார். எவ்வாறாயினும், இரு நாடுகளுக்கிடையிலான போட்டிகள் இடம்பெறும் இடம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
ஐசிசி நிர்வாகி கூறுகையில், “சிறிது நேரம் நடந்த செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் ஆலோசனைக்காக இன்று மீண்டும் கூட்டம் நடைபெறும். திட்டமிட்டபடி சாம்பியன்ஸ் டிராபி தொடரை எப்படி நடத்துவது என்பது குறித்து அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து முடிவு செய்வார்கள்” என்றார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் – இந்தியா இடையே நடைபெற்று வரும் சந்திப்பின் முடிவு அன்றைய தினம் அறிவிக்கப்படலாம்.