சென்னை அணியின் தொடர்ச்சியான தோல்விகள் மற்றும் கள்ளச்சந்தை டிக்கெட் விற்பனை காரணமாக ரசிகர்கள் இந்த முறை ஐ.பி.எல். போட்டிகளுக்குப் பெரிய ஆர்வம் காட்டவில்லை.
தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில், டிக்கெட் விற்பனை தொடர்பாக முறைகேடுகள் நடந்துவந்துள்ளன. ரசிகர்கள் பலரும் கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதைக் குறித்து தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

அதிக விலைக்கு டிக்கெட் வாங்கும் ரசிகர்கள், தங்களுக்குத் தரமான ஆட்டம் கிடைக்கவில்லையென்ற எண்ணத்தில் மிகுந்த ஏமாற்றத்தை தெரிவித்து வருகின்றனர். சென்னை அணியின் வீரர்கள் தொடர்ந்து சொதப்பி விளையாடி வரும் நிலையில், அணியின் மீது இருந்த விசுவாசமும் மங்கியுள்ளது. அணியானது ஏற்கனவே 6 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது.
இந்த நிலைமையில் வரும் 25ம் தேதி சென்னை அணி சேப்பாக்கத்தில் ஐதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது.
முன்னெல்லாம் டிக்கெட் விற்பனை ஒரு மணி நேரத்தில் நிறைவடைந்துவிடும். ஆனால் இப்போது, டிக்கெட் விற்பனை மிகவும் மந்தமாக இருக்கின்றது.
இந்த மாற்றத்தால், ரசிகர்கள் தற்போது ஐ.பி.எல். போட்டி மீதும், சென்னை அணியின் செயல்பாடு மீதும் ஏற்பட்டுள்ள அதிருப்தி வெளிப்படையாகக் காணப்படுகின்றது.