May 9, 2024

பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை செய்து பாருங்க…

பண வரவு அதிகரிக்க சில பொருட்களை பர்சில் வைத்துக்கொள்ளலாம் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றைச் செய்வதால் அதிர்ஷட வாய்ப்புகள் தேடி வரும் என்பது நம்பிக்கை.

ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள பரிகாரங்கள் மிகவும் எளிமையானவை: செலவு இல்லாதவை. இந்த பரிகாரங்களைச் செய்ய நீங்கள் எந்த சிறப்பு முயற்சியும் செய்யவேண்டியதில்லை. பணப் புழக்கத்தை அதிகரிக்கவும் ஜோதிடத்தில் சில வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட சில யோசனைகளைத் தெரிந்துகொள்வோம்.

பர்சில் வைக்கவேண்டியவை

பலர் தங்கள் பர்சில் பணம், நாணயங்களுடன் தங்கள் அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை வைத்திருக்கிறார்கள். இருப்பினும், சில பொருட்களை பர்சில் வைத்திருப்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. அப்படிப்பட்ட பொருட்களை எல்லாம் பர்சில் வைத்துக்கொண்டால் செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மி அருள் உங்களுக்குக் கிடைக்கும்.

பூஜை பூக்கள்

காலையில் எந்த ஒரு நல்ல நேரத்திலும் விஷ்ணுவின் கோவிலுக்குச் செல்லுங்கள். பெருமாளுக்கு சிவப்பு அல்லது மஞ்சள் நிற ரோஜா மலர்களை வைத்து வணங்குங்கள். செல்வச் செழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். பின் பெருமாளின் காலடியில் வைத்த ரோஜா மலரை பிரசாதமாகப் பெற்றுக்கொள்ளுங்கள். அந்தப் பூவின் இதழ்கள் சிலவற்றை நிழலில் உலர்த்தி உங்கள் பர்ஸ் உள்ளே வைத்துக்கொள்ளுங்கள். இந்த பூ இதழ்கள் இருக்கும் வரை, உங்கள் பாக்கெட் காலியாகவே இருக்காது.

நாணயம்

லக்ஷ்மி, சரஸ்வதி, விநாயகர் படத்துடன் வெள்ளி அல்லது தங்க நாணயத்தை பூஜையில் வைத்து அந்த நாணயத்தை பர்சில் வைத்துக்கொள்ளலாம். அதற்கு வசதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஏதேனும் ஒரு சுப தினத்தில் உங்களிடம் உள்ள ஒரு நாணயத்தை கடவுளின் பாதத்தில் வைத்து பூஜை செய்யுங்கள். ஒரு வாரம் அப்படியே வைத்துவிட்டு பின் அந்தக் காசை எடுத்து பர்சில் வையுங்கள். அது கடவுளின் ஆசியாக உங்களுடன் பர்சில் இருக்கும் வரை பர்சில் பணம் சேர்ந்துகொண்டே இருக்கும்.

இஷ்ட தெய்வம்

செழிப்பாவும் மகிழ்ச்சியாவும் இருக்க இஷ்ட தெய்வத்தின் படத்தை பர்சில் வைத்துக்கொள்ளலாம். தினமும் ஒருமுறை தவறாமல் பர்ஸில் இருந்து அந்தப் படத்தை எடுத்து வணங்கவும் வேண்டும். இந்தப் பரிகாரம் அதிர்ஷட வாய்ப்புகளைக் கொண்டுவந்து பணச்சேர்க்கையை அதிகப்படுத்தும்.

அரிசி

பூஜையின் போது அரிசியை ஒரு சிட்டிகை அளவு எடுத்து இறைவனின் முன்பு வைத்து பணத்தேவை பூர்த்தி செய்ய வேண்டும் என்று வழிபட வேண்டும். பின்னர் அந்த அரிசியை எடுத்து நீங்கள் பயன்படுத்தும் பர்ஸ் அல்லது ஹேட்பேக் உள்ளே வைத்துக்கொண்டால், பண வரவும் பெருகும். அதோடு தேவையற்ற செலவுகள் குறையத் தொடங்கும்.

ருத்ராட்சம்

சாஸ்திரங்களின்படி, ருத்ராட்சத்தை பர்சில் வைத்திருப்பதால் வறுமை நீங்கி வளங்கள் கூடும் என்பது நம்பிக்கை. இறைவனின் அருள் பெற்ற ருத்ராட்சத்தை வைத்துக்கொள்வதால் செல்வச் செழிப்பு அதிகரிப்பதுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!