திருமலை: திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதைகளில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், வாகன ஓட்டிகள் கூடுதல் விழிப்புடன் வாகனம் ஓட்ட வேண்டும். பக்தர்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க, மலைப்பாதையை மூடாமல், குறிப்பிட்ட நேரத்திற்குள் பழுதுபார்க்கும் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்கள் பயணத் திட்டங்களை மாற்றி, குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பயணத்தைத் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சாலை புனரமைப்பு காரணமாக, வாகன ஓட்டிகள் சில நேரங்களில் குறுகிய நிறுத்தங்களுடன் மெதுவாக பயணிக்க வேண்டியிருக்கும் என்பதை பக்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
பக்தர்களுக்கு பயணத்தை எளிதாகவும் வசதியாகவும் மாற்றுவதற்காக தேவஸ்தானம் சாலை புனரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.