கர்நாடகாவின் கொப்பாலில் உள்ள கே.ஆர்.ஐ.டி.எல்., எனப்படும் கர்நாடக ரூரல் உள் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தில், தினக்கூலியாக பணியாற்றிய ஒரு ஊழியர் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை குவித்திருப்பதை லோக் ஆயுக்தா அதிகாரிகள் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஊழியர் சிஞ்சோளிகர், எலக்ட்ரிகல் இன்ஜினியராக பணியாற்றியவர். 100 கோடி செலவில் பணிகள் நடந்ததாக பொய்யான பில்கள் தயாரித்து பணம் பெற்றார் என்று குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதுகுறித்து, கே.ஆர்.ஐ.டி.எல் அதிகாரிகள் சிஞ்சோளிகர், ஒப்பந்த ஊழியர் களசப்பா மற்றும் மற்றொரு ஒப்பந்ததாரர் மீது லோக் ஆயுக்தாவில் புகார் அளித்துள்ளனர். இதன்படி லோக் ஆயுக்தா அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, களசப்பா நிடகுந்தியின் வீட்டில் இருந்து சொத்து மற்றும் ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். இதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சோதனையில் அபார்ட்மென்ட், 24 வீடுகள், 30க்கும் மேற்பட்ட மனைகள், லட்சக்கணக்கான மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் போன்ற சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 20 ஆண்டுகள் பணி செய்த இவர், சில நாட்களுக்கு முன்பு ஊழல் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டார். மாதம் 15,000 ஊதியம் பெற்ற இந்த தினக்கூலி ஊழியருக்கு இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தன என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது.
இது போன்ற முறைகேடுகள் கே.ஆர்.ஐ.டி.எல்., அலுவலகத்திலும் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதால், லோக் ஆயுக்தா அதிகாரிகள் விசாரணையை விரிவுபடுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் அதிகாரபூர்வ விசாரணைகளுக்காக எதுவும் மறைக்கப்படாமல் நடந்துகொண்டு இருக்கிறது.