கர்நாடகாவில் 48 எம்.எல்.ஏ.க்களை பெண்களுடன் நெருக்கமாக பழக விட்டு, பின்னர் அவர்களிடம் ரகசிய தகவல்களை மிரட்டி பெற முயற்சி நடத்தப்பட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகள், கட்சி வேறுபாடின்றி 48 எம்.எல்.ஏ.க்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள், அரசியல் நோக்கங்களுக்காக இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது, பெண்களை பயன்படுத்தி அவர்களிடம் ரகசிய தகவல்களை திருட முயற்சிகள் நடத்தப்படுவதாகவும், இதனை ஒரு கும்பல் அரசியல் அடிப்படையில் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளும் காங்கிரஸ் தரப்பினர் உறுதியளித்துள்ளனர். இதேபோல், உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, இந்த விவகாரத்தை உயர்மட்ட குழுவின் கீழ் விசாரணைக்கு ஆணையிடப்போகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மிரட்டல்கள் தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சிடி ரவி கோரியுள்ளார்.