திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு கொல்கத்தாவை சேர்ந்த சஞ்சீவ் கோயங்கா என்ற பக்தர் நேற்று 5.267 கிலோ எடையுள்ள 2 தங்க கைகளை (கைகளை) காணிக்கையாக செலுத்தினார்.

தங்கக் கஸ்தங்களை, ரூ. 3.63 கோடியை திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி பெற்றுக்கொண்டார். முன்னதாக சஞ்சீவ் கோயங்கா ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் மரியாதை செய்து தீர்த்த பிரசாதம் வழங்கினர்.