ஏசி (AC) பயன்பாட்டில் வெப்பநிலை 20°C முதல் 28°C வரை மட்டுமே நிர்ணயிக்க புதிய விதிமுறை கொண்டுவரப்பட உள்ளது என்று ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். இந்த விதிமுறையின் கீழ், ஏசி வெப்பநிலையை 20°C-க்கு கீழ் குறைக்கவோ அல்லது 28°C-க்கு மேல் அதிகரிக்கவோ முடியாது.

இந்த தீர்மானம் காலநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஏசி கருவிகள் மின்சார நுகர்வை அதிகரிக்கின்றன. அதனால் சுற்றுச்சூழலுக்கு எதிரான தாக்கமும் உருவாகிறது. இதை தடுக்கும் நோக்கத்துடன் இந்த வரம்பு அமல்படுத்தப்பட இருக்கிறது.
இந்த புதிய விதிமுறை வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள், மற்றும் பொதுப் பயன்பாட்டு வாகனங்கள் போன்ற இடங்களில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடைமுறை அமலாக்கம் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.
இம்மாதிரியான கட்டுப்பாடுகள் மின்சார சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அத்தியாவசியமாக கருதப்படுகின்றன. மேலும், பொதுமக்கள் சூழல் பாதுகாப்பில் பங்காற்றும் வகையில் தங்களை சீரமைக்க வேண்டும் என்றும் ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டார் வலியுறுத்தினார்.
இந்த விதிமுறை நடைமுறையில் வந்தால், நாட்டிலுள்ள ஏசி பயன்பாட்டில் முக்கிய மாற்றமாக கருதப்படலாம். மக்கள் இதனை புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தை சந்ததிக்க சீரான சூழலை உருவாக்க இது அவசியமானதாகும் என்றும் அவர் கூறினார்.