திருவனந்தபுரம்: மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் நேற்று கூறியதாவது:- “சமூக ஊடகங்கள் மூலம் என்னுடன் நட்பு கொண்ட ஒரு அரசியல்வாதி என்னை ஆபாச சைகைகள் செய்து ஹோட்டல் அறைக்கு அழைத்தார்.
காங்கிரஸில் உள்ளவர்கள் உட்பட பல பெண்களுக்கும் இதே போன்ற அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன.” அந்த அரசியல்வாதியின் பெயரை வெளியிட அவர் மறுத்துவிட்டார். இருப்பினும், அது பாலக்காடு எம்.எல்.ஏ மற்றும் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் என்று ஊகங்கள் எழுந்துள்ளன.

கடந்த ஆண்டு பாலக்காடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ராகுல், புகாருக்கு பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில், ராகுல் மம்கூடத்தில் நேற்று மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும், அவர் பாலக்காடு எம்.எல்.ஏ.வாக தொடர்கிறார்.