புதுடில்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றத்தை அடுத்து ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை முப்படைகள் முறியடித்து வருகின்றனர். இருப்பினும் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தானுடன் மோதல் அதிகரிக்கும் நிலையில் ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பகுதிநேர தன்னார்வலர்கள் கொண்ட படையையும், இந்திய ராணுவத்துக்கு உதவும் வகையிலான படை வீரர்களை ராணுவ தளபதி வழி நடத்துவார் என்று கூறப்படுகிறது.