புது டெல்லி: குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த மாதம் 12-ம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம், மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதில் 260 பேர் பலியாகினர்.
விபத்துக்கான காரணம் என்ஜின்களுக்கு எரிபொருளை வழங்கும் சுவிட்சுகள் செயலிழந்ததே என்று முதற்கட்ட விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பின்னர், சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவின் பேரில், ஏர் இந்தியா தனது போயிங் 787 மற்றும் போயிங் 737 விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளின் செயல்பாட்டை ஆய்வு செய்தது.

இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்ட தகவலின்படி, ‘ஆய்வுகளின் போது எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளின் செயல்பாட்டில் எந்தப் பிரச்சினையும் கண்டறியப்படவில்லை.
சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவுகளின் அடிப்படையில், நாங்கள் ஆய்வுகளைத் தொடங்கி, குறிப்பிட்ட நேரத்திற்குள் அவற்றை முடித்தோம். இது குறித்து ஆணையத்திற்கும் தெரிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.