குஜராத் மாநிலத்தில் இன்று நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கார்கே, கட்சி அமைப்புகளை உருவாக்குவதில் மாவட்ட தலைவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்றும், அவர்களுடைய வழிகாட்டுதலின் படி கட்சி நிர்வாகிகள் பாரபட்சமின்றி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், “நான் மற்றும் ராகுல் காந்தி அனைத்து மாநிலங்களில் உள்ள மாவட்ட நிர்வாகிகளுடன் பேசியுள்ளோம். அவர்களுடைய கருத்துக்களை நாங்கள் பரிசீலனை செய்ய உள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார். எதிர்கால தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு நடைமுறையில் மாவட்ட தலைவர்கள் முழு ஈடுபாட்டுடன் பணி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
ஆனால், அவர் கட்சி பணிக்கு உதவாதவர்கள், கட்சி பணியை விருப்பமாகச் செய்யாதவர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார். “தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றாதவர்கள் கட்சிக்கு தேவையில்லை,” என்று அவர் கூறினா, இதனால் பரபரப்பு ஏற்பட்டது.