பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்திற்கு அமெரிக்காவின் வரி விதிப்பு காரணம் அல்ல என மத்திய அரசு தெளிவாக தெரிவித்துள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இராணுவ நடவடிக்கை மே 10ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இதன் பின், பாகிஸ்தான் ஹாட்லைன் வழியாக இந்தியாவின் டிஜிஎம்ஓ-விடம் அமைதி வேண்டியது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், வரி விதிப்பு அறிவிப்பு காரணமாகவே இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டதாகக் கூறியிருந்தார். ஆனால் இந்தக் கருத்தை இந்தியா மறுக்கிறது. பாகிஸ்தான் மீது தொடப்பட்ட தாக்குதல் நடவடிக்கை முடிவடைய நேர்ந்த போது, அமெரிக்கா தொடர்பான எந்த ஆலோசனையும் இந்தியாவுடன் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், டிரம்ப் அறிவிப்புகள் போர் நிறுத்தத்திற்கு காரணம் என அமெரிக்க அரசு கூறியது. இதற்கு பதிலளித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால், மே 7 முதல் 10ஆம் தேதி வரை இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான் என்றாலும், வரி விதிப்பு குறித்து எந்த பேச்சும் நடைபெறவில்லை என உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில், போர் நிறுத்தத்திற்கு இந்தியா மட்டுமே முடிவெடுத்தது என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. இந்தியாவின் உள்நாட்டு அரசியல், பாதுகாப்பு நிலை, பாகிஸ்தானின் நிலைமாறுகள் ஆகியவையும் இந்த முடிவிற்கு வழிவகுத்துள்ளன.
மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த தகவல், போர் நிறுத்தம் குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயல்கிறது.