ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார். இவர் கடப்பாவில் நடைபெற்ற 3 நாள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார். இப்போது புழக்கத்தில் உள்ள மிக உயர்ந்த மதிப்புள்ள நாணயமாக ரூ.500 நோட்டுதான் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

2016ம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகமானது. ஆனால் தற்போது ரூ.2000 நோட்டுகளும் புழக்கத்தில் இருந்து மீண்டும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், பெரிய மதிப்புள்ள நோட்டுகளுக்கு தேவை இல்லை என்றார்.
இந்த நிலைமையில் ரூ.500 நோட்டுகளையும் திரும்பப் பெறுவது அரசியலுக்கும் நல்லது என்றும், நிதி பத்திரமாக பரிமாறும் சூழல் உருவாகும் என்றும் நாயுடு தெரிவித்தார்.தெலுங்கு தேசம் கட்சி எப்போதும் தூய்மையான அரசியலையே பின்பற்றுகிறது என்றும், கருப்புப் பணத்தை ஆதரிக்காது என்றும் அவர் கூறினார். இந்நிலையில், அரசியல் கட்சிகளும் நேரடி பரிவர்த்தனைகளில் ஈடுபடலாம் என்றார்.இதனால், நாட்டு நிதி நடவடிக்கைகள் மேலும் வெளிப்படையாக இருக்கும் என்றும், நாடு முன்னேறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.