சென்னை: வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள விமான நிலையத்தில் நேற்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், சென்னையில் இருந்து டாக்காவிற்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று மதியம் 1.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 164 பயணிகளுடன் புறப்பட்டது. இருப்பினும், டாக்கா விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானிக்கு அவசரமாக தகவல் தெரிவிக்கப்பட்டு கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இதேபோல், சென்னையில் இருந்து டாக்காவிற்கு செல்லும் பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று மதியம் 2.40 மணிக்கு 187 பயணிகளுடன் சென்னையிலிருந்து டாக்காவிற்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. டாக்காவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

விமானத்தில் இருந்த 187 பயணிகளும் இறக்கிவிடப்பட்டு சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். டாக்காவில் நிலைமை சீரடைந்த பிறகு விமானம் மீண்டும் டாக்காவுக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் டாக்காவில் நிலைமை எப்போது சீரடையும் என்று தெரியாததால், வங்கதேசம் செல்ல வேண்டிய பயணிகள் சென்னை விமான நிலையத்திலேயே சிக்கித் தவித்தனர்.