போபால்: மத்தியப் பிரதேசத்தில் உள்ள புனிதத் தலங்களில் மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து துறவிகளின் பரிந்துரைகளை அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தார்.
போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோயில்களின் புனிதத்தை உறுதி செய்வதற்காக, மாநில அரசு மதுவிலக்கை பரிசீலித்து வருகிறது. இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும், இது தொடர்பாக துறவிகள் அளித்த பரிந்துரைகளை மாநில அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும்” என்றார்.

“நடப்பு பட்ஜெட் ஆண்டு முடிவுக்கு வருகிறது. மத நகரங்களில் எங்கள் கொள்கையை திருத்தி மதுவை தடை செய்ய முயற்சிக்கிறோம். பல துறவிகள் இந்த பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். மேலும், மத சூழல் குறித்து மக்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில், மதுபானக் கடைகளை மூடுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.”
முதல்வர் மோகன் யாதவ், “நாங்கள் தீவிரமாக இருக்கிறோம், விரைவில் இது குறித்து முடிவெடுப்போம்” என்றார்.