துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், ஆசை வார்த்தைகள் மூலம் மதமாற்றம் தடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள குரு காசிதாஸ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பேசியதாவது:-
ஒற்றுமை மற்றும் சமத்துவத்தின் உணர்வின் உருவகமாக குரு காசிதாஸ் இருந்தார். அவரைப் போன்ற குருக்களால்தான் இந்தப் பகுதியின் சமூக-கலாச்சாரத் தன்மை மாறவில்லை. மகரிஷி வால்மீகி, பகவான் பிர்சா முண்டா, ரவி தாஸ் மற்றும் ஜோதிபா புலே உள்ளிட்ட பிரபல ஆளுமைகள் நம் நாட்டில் வாழ்ந்துள்ளனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் சமூக கட்டமைப்பின் தூணாக நிற்கிறார்கள். ஆனால் சிலர் தங்கள் நோக்கங்களையும் எண்ணங்களையும் சீர்குலைக்கும் வகையில் ஆசை வார்த்தைகள் மூலம் மதமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். இது கவலையளிக்கிறது. இந்தச் செயல் நமது நாகரிக விதிமுறைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகும். இதுபோன்ற தீய நோக்கங்களை நாம் கண்டிக்க வேண்டும், எதிர்க்க வேண்டும், அடக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.