ஜெய்ப்பூர்: உலகப் புகழ்பெற்ற மைசூர் பாக் என்ற பெயரை ராஜஸ்தானில் உள்ள இனிப்புக் கடைகள் மாற்றியுள்ளன. ஏப்ரல் 22 அன்று, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீரில் உள்ள பஹல்காமைத் தாக்கினர், இதில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கி அழித்தது.

இதில் சுமார் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சூழ்நிலையில், ராஜஸ்தானில் மைசூர் பாக், மோதி பாக், ஆம் பாக், கோண்ட் பாக் போன்ற இனிப்புகளின் பெயர்கள் மைசூர் ஸ்ரீ, மோதி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோந்த் ஸ்ரீ என மாற்றப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் உள்ள தியோஹர் ஸ்வீட்ஸ் உரிமையாளர் அஞ்சலி ஜெயின் ஒரு நேர்காணலில், ‘பாக்’ என்ற வார்த்தை தங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாக வாடிக்கையாளர்கள் கூறியதால் பெயர் மாற்றப்பட்டதாகக் கூறினார்.