கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள எஸ்.எஸ்.ஸ்ரீனிவாசா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இதற்கான வரைவுகளை திருமலையில் உள்ள தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் சி.எச்.வெங்கையா சவுத்ரியிடம் வழங்கினர். இதில் ரூ. 1 கோடியே 1 லட்சத்து 11,111 நன்கொடையாக எஸ்.வி. அன்னபிரசாதம் அறக்கட்டளை, ரூ. 11 லட்சத்து 11,111-க்கு எஸ்.வி. பிராணதானம் அறக்கட்டளை, மற்றும் ரூ. 11 லட்சத்து 11,111-க்கு எஸ்.வி. வித்யாதானம் அறக்கட்டளையை நன்கொடையாக வழங்கினார்.

இதேபோல், திருப்பதியைச் சேர்ந்த கேஎஸ்பி டாக்கீஸ் நிறுவனத் தலைவர் கேதன் சிவபிரிதம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நித்ய அன்னபிரசாத அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சம் நன்கொடையாக வழங்கினார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பானு பிரகாஷ் ரெட்டி, சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.