சண்டிகர்: விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க அரசு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் ஒருங்கிணைப்பாளரும் விவசாயியுமான ஜக்ஜித் சிங் தலேவால் நவம்பர் 24 முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக, மத்திய வேளாண் அமைச்சக இணைச் செயலாளர் பிரியா ரஞ்சன் தலைமையிலான மத்திய அரசு அதிகாரிகள் குழு, ஜக்ஜித் சிங் தல்லேவால் உள்ளிட்ட விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை கடந்த ஜனவரி 20-ம் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக பிப்ரவரி 14-ம் தேதி சண்டிகரில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கு மருத்துவ சிகிச்சை பெற சம்மதித்த தள்ளேவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலேவால் தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இதைத் தொடர்ந்து, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் தலேவாலை சந்தித்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் ஜக்ஜித் சிங் தலேவால் தனது 131 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் பதேகர் சாஹிப் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தல்லேவால், உங்களின் உத்தரவை ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட எங்களது கோரிக்கைகள் தொடரும்.