புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், “சிங்கப்பூரைச் சேர்ந்த மேட் ஓவர் டோனட்ஸ் நிறுவனம் தனது வணிகத்தை தவறாக வகைப்படுத்தி பேக்கரி பொருட்களுக்கு 18 சதவீத வரிக்கு பதிலாக 5 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்தியதற்காக ரூ.100 கோடி வரி விதிப்பை எதிர்கொள்கிறது.

பாப்கார்னுக்குப் பிறகு, இப்போது ஜிஎஸ்டியால் பாதிக்கப்படும் டோனட்ஸ் முறை. இந்த வழக்கு தற்போது மும்பை உயர்நீதிமன்றத்தில் உள்ளது. எளிதாக வியாபாரம் செய்வது அவசியம். கடந்த ஆண்டு டிசம்பரில், ஜிஎஸ்டியின் கீழ் பாப்கார்னுக்கு மூன்று வெவ்வேறு விகிதங்களில் வரி விதிக்கப்பட்டது, இது ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உள்ள சிக்கல்களை அம்பலப்படுத்தியுள்ளது.