மும்பை: ஹஜ் என்பது சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு முஸ்லிம்கள் ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளும் புனித யாத்திரை. இது முஸ்லிம்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தனது வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
இது கடவுளை வணங்குவதற்கான ஒரு சிறப்பு வழி. அந்த வகையில், இந்திய ஹஜ் குழு, இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் செய்யலாம் என்ற விதியை செயல்படுத்தி வருகிறது. ஹஜ் 2026-க்கு விண்ணப்பிக்க ஜூலை 30 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு வாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 7-ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வோரை தேர்வு செய்வதற்கான குலுக்கல் இன்று மும்பையில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலிருந்து 2026-ம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு ஹஜ் கமிட்டி மூலம் 10890 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு, தனியார் ஹஜ் நிறுவனங்களின் வழியில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, இந்த ஆண்டு ஹஜ் கமிட்டி மூலம் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.