லக்னோ: செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது, முதல்வர் ஆதித்யநாத்திடம், முஸ்லிம்கள் ஆபத்தில் இருப்பதாக அசாதுதீன் ஒவைசி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆதித்யநாத், “முஸ்லிம்கள் யாரும் ஆபத்தில் இல்லை. அவரது (அசாதுதீன் ஒவைசி) வாக்கு வங்கிதான் ஆபத்தில் உள்ளது. இந்திய முஸ்லிம்கள் தங்கள் மூதாதையர்களை புரிந்து கொள்ளும் நாளில், இதுபோன்றவர்கள் துணி மூட்டைகளுடன் வெளியேற வேண்டும்.
இந்துக்களும், இந்து பாரம்பரியமும் பாதுகாப்பாக இருக்கும் வரைதான் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை உணர வேண்டும். பாகிஸ்தானில் ஹிங்லாஜ் மாதா கோவில் இல்லையா? நூறு இந்துக் குடும்பங்களில் ஒரு முஸ்லிம் குடும்பம் பாதுகாப்பாக இருக்க முடியும். அவர்கள் அனைத்து மத வழக்கங்களையும் சுதந்திரமாக பின்பற்றலாம். ஆனால் நூறு முஸ்லிம் குடும்பங்களில் 50 இந்துக் குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா? இல்லை அதற்கு பங்களாதேஷ் ஒரு உதாரணம், அதற்கு முன் பாகிஸ்தான் ஒரு உதாரணம்.
ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது. தாக்கப்படும் முன் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதைத்தான் நாம் கவனிக்க வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் 2017-க்கு முன் கலவரம் நடந்திருந்தால், இந்துக் கடைகள் எரிக்கப்பட்டால், முஸ்லிம்களின் கடைகளும் எரிக்கப்பட்டிருக்கும், இந்து வீடுகள் எரிக்கப்பட்டால், முஸ்லிம் வீடுகளும் எரிக்கப்பட்டிருக்கும். 2017-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கலவரங்கள் நின்றுவிட்டன. நான் ஒரு சாதாரண குடிமகன், உத்தரபிரதேச குடிமகன். நான் ஒரு யோகி, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பும் யோகி.

அனைவரின் ஆதரவையும் வளர்ச்சியையும் நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். சனாதன தர்மம் குறித்து கருத்து தெரிவித்த யோகி ஆதித்யநாத், “சனாதனம் உலகின் பழமையான மதம் மற்றும் கலாச்சாரம். அதன் பெயரிலேயே நீங்கள் உணரலாம். சனாதனத்தை பின்பற்றுபவர்கள் யாரும் மற்றவர்களை தனது மதத்திற்கு மாற்றுவதில்லை. எந்த ஒரு இந்து ஆட்சியாளரும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி யாரையும் ஆதிக்கம் செலுத்திய உதாரணம் உலகில் இல்லை” என்றார். இவ்வாறு உத்தரபிரதேச முதல்வர் கூறினார்.