புதுச்சேரி: புதுச்சேரி 15-வது சட்டசபையின் 6-வது பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் கைலாசநாதன் உரையை வாசித்தார். தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி, மார்ச், 12-ல் பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம், மார்ச், 11, 13-ல் நடந்தது.இதையடுத்து, பட்ஜெட் தாக்கல் துவங்கிய கூட்டத்தொடரில், கேள்வி நேரம் நடந்து வருகிறது.

பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகள் மற்றும் மாநில திட்டங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர். உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் அரசு பதில் அளித்து வருகிறது. இந்நிலையில் நெல்லித்தோப்பு எம்எல்ஏ ரிச்சர்ட் கூறியதாவது:-
மாநில அரசு வழங்கும் இலவச அரிசியை பெரும்பாலானோர் வாங்கவில்லை. இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இல்லாத பகுதிகளில் வீடு வீடாக அரிசி மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். புதுச்சேரியில் பல ஆண்டுகளாக மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறந்துள்ளோம்.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் சம்பளம் வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.