புனே: மகாராஷ்டிராவின் புனே பகுதியில் ஜிபிஎஸ் (குய்லின்-பாரே) நோய்த் தொற்று நீர் மூலம் பரவியதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த மாதம் ஜிபிஎஸ் (குய்லின்-பாரே) நோய் பரவியது. இதனால் இதுவரை 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு ஏற்கனவே இந்த நோய்த்தொற்றுக்கு 6 பேர் உயிரிழந்த நிலையில், சென்னையில் உள்ள குழந்தைகள் நல மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 வயது சிறுவன் கடந்த மாதம் 31-ம் தேதி உயிரிழந்தான். ஜிபிஎஸ் தொற்று காரணமாக சிறுவன் உயிரிழந்தது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் ஜிபிஎஸ் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா சுகாதாரத் துறை, ஜிபிஎஸ் நோய்த் தொற்றுக்குக் காரணம், தண்ணீரின் மூலம் பரவும் ‘கேம்பிளோபாக்டர் ஜெஜூனி’ என்ற பாக்டீரியாதான் என்று ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது.