புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் மேலும் கூறியதாவது:- இந்தியாவின் மிகப்பெரிய பலம் ஜனநாயகம். எனவே எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்தாலும், இந்தியா உலகின் மிகப்பெரிய கல்வி மையமாக மாற முடியும். இது எங்களுக்கு மிகவும் சாதகமான அம்சமாகும். தற்போது இந்தியப் பொருளாதாரம் உலக அளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நமது பொருளாதாரம் நான்காவது இடத்திற்கு முன்னேறும்.

அதன் பிறகு இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாகும். சர்வதேச நிதித் தரவுகளின்படி, இந்தியப் பொருளாதாரத்தின் அளவு தற்போது 4.3 டிரில்லியன் டாலர்கள் (ரூ. 367 லட்சம் கோடிகள்). இந்நிலையில் அடுத்த மூன்றாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் ஜப்பான், ஜெர்மனியை மிஞ்சும். 2047-ம் ஆண்டுக்குள், அதாவது சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவில், 30 டிரில்லியன் டாலர் (ரூ. 2,562 லட்சம் கோடி) பொருளாதார மதிப்பில் நமது நாடு இரண்டாவது இடத்தில் இருக்கும்.
உலகெங்கிலும் உள்ள உழைக்கும் வயதினருக்கு இந்தியா ஒரு நிலையான வழங்குநராக இருக்கும். இதுவே எங்களின் மிகப்பெரிய பலமாக இருக்கும். இவ்வாறு சுப்ரமணியம் கூறினார்.