புது டெல்லி: இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா ஜூன் 8-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்ல உள்ளார். சுபன்ஷு சுக்லா உத்தரபிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். இந்திய விமானப்படை விமானியான சுக்லா, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக, அவர் 2019-ல் ரஷ்யாவில் உள்ள யூரி காகரின் விண்வெளி மையத்தில் பயிற்சி பெற்றார்.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 விண்வெளி வீரர்களை அனுப்ப உள்ளது. இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா, போலந்து மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த விண்வெளி வீரர்களும் செல்ல உள்ளனர்.

கடந்த மாதம் 29-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த இந்த பணி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்களுடன் வரும் 8-ம் தேதி அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்திலிருந்து டிராகன் விண்கலம் தனது பயணத்தைத் தொடங்க உள்ளது.