விவசாயம், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட தொலைதூர உணர்திறன் பயன்பாடுகளுக்காக கார்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட் போன்ற பல்வேறு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) விண்வெளியில் நிலைநிறுத்தி வருகிறது.
அந்த வரிசையில், பூமி கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இஸ்ரோ வடிவமைத்த அதிநவீன ரேடார் செயற்கைக்கோளான EOS-09 (ரிசாட்-1B), இன்று காலை 5.59 மணிக்கு ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்திலிருந்து PSLV-C61 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இது சூரிய ஒத்திசைவான துருவ சுற்றுப்பாதையில் (SSPO) நிலைநிறுத்தப்படவிருந்தது.

ஆனால் ஏவப்பட்ட சில நிமிடங்களில் பணி தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவித்தது. “இன்று, 101-வது செயற்கைக்கோள் ஏவுதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. PSLV-C61 செயல்திறன் நிலை 2 வரை இயல்பாக இருந்தது. நிலை 3-ல் ஒரு கண்காணிப்பு காரணமாக, பணியை முடிக்க முடியவில்லை” என்று இஸ்ரோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.