சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தலைவர் நாராயணன் நேற்று மாலை 7.30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையிலிருந்து பெங்களூருக்கு புறப்பட்டார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது:-
ராக்கெட் தோல்வி குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளோம். குழு விசாரணை நடத்தி வருகிறது. நான் இப்போதுதான் அந்த விசாரணைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதற்கான காரணங்களைக் கண்டுபிடித்து, அடுத்த ராக்கெட்டிலும் இதே நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம். ராக்கெட் சோதனை தோல்வியடைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது.

இருப்பினும், ஒவ்வொரு மாதமும் ஒரு ராக்கெட் என்ற விகிதத்தில், தொடர்ச்சியாக 13 ராக்கெட்டுகளை ஏவ உள்ளோம். இந்த ராக்கெட் தோல்வியடைந்தாலும், அடுத்தது திட்டமிட்டபடி ஒவ்வொரு மாதமும் ஏவப்படும். மக்கள் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதை உறுதி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு அனைத்து வகையான பணிகளையும் செய்து வருகிறது. இந்தியாவிற்கு நாம் என்ன செய்ய முடியுமோ, அதை விண்வெளித் துறையில் சிறப்பாகச் செய்கிறோம் என்று அவர் கூறினார்.