புது டெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நேற்று சீனாவின் தியான்ஜினில் நடைபெற்றது. மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இதில் பங்கேற்றார்.
கூட்டத்திற்கு முன்பு, அனைத்து எஸ்சிஓ அமைச்சர்களும் நேற்று காலை சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தனர். 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு முதல் முறையாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.

இந்த சந்திப்பு தொடர்பான அமைச்சரின் விளக்கத்தை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது X பதிவில், “சீன வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்து பிரதமர் மோடியைச் சந்தித்து இந்தியா-சீன உறவுகளில் தற்போதைய முன்னேற்றங்களை விளக்குவார் என்று நினைக்கிறேன்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அழிக்கும் நோக்கில் அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு பெரிய சர்க்கஸை நடத்தி வருகிறார்” என்று கூறியுள்ளார்.