மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அவர் கூறியதாவது: தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை ஆப்பரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளது. குறிப்பாக சைபர் தாக்குதல்களை எதிர்க்கும் அவசியத்தை அது வெளிப்படுத்தியது. இதனால், நமது உள்கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற அவசியம் உருவாகியுள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டதையும் ஆப்பரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளது. எதிர்கால சவால்களை சந்திக்க தன்னம்பிக்கை அவசியம். மேலும், இந்தியாவில் ஜெட் இன்ஜின்கள் உருவாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
தொழில்நுட்ப வளர்ச்சி அதிக வேகத்தில் முன்னேறி வரும் நிலையில், புதிய கண்டுபிடிப்புகளையும் எதிர்பாராத சவால்களையும் சமாளிக்க இந்தியா எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். இன்று போர்கள் நிலம், கடல், வான்வெளி மட்டுமின்றி விண்வெளி மற்றும் சைபர் ஸ்பேஸிலும் நடைபெறுகின்றன என்பதை அவர் எடுத்துக்காட்டினார்.