மஹா கும்பமேளா 2025-ல் பல புதிய சாதனைகளுடன் சிறப்பாக முடிந்துள்ளது. இதில் 80 அடி நீளம் மற்றும் 5 அடி அகலத்திற்கு உட்பட்ட துணியில் 10,000 பேர் கையால் வரைந்த ஓவியம் உருவாக்கப்பட்டது. மேலும், 15,000 துாய்மை பணியாளர்கள் ஒரே நேரத்தில் விழா நடந்த இடத்தில் துாய்மை பணி மேற்கொண்டனர். இவை அனைத்தும் கின்னஸ் புத்தகத்தில் உலக சாதனைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கான சான்றிதழை கின்னஸ் அமைப்பின் பிரதிநிதிகள் முதல்வரிடம் வழங்கினார்கள். இது ஒரு புதிய சாதனையாகும், ஏனெனில் இதற்கு முன்பு 10,000 பேர் ஒரே நேரத்தில் துாய்மை பணி மேற்கொண்டதை சாதனையாகக் கொண்டிருந்தது.
மஹா கும்பமேளா, நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் சமத்துவத்தின் மிகப்பெரிய திருவிழாவாக இருந்தது. இதில் 66.21 கோடி பேர் பங்கேற்று புனித நீராடினர். பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்தத் திருவிழா உலக வரலாற்றில் இதுவரை நடக்காத மற்றும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது.