கொல்கத்தா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இருக்காது என்றும், வரும் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து வெற்றி பெறும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேற்கு வங்க சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன் நடந்த கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் உட்பட வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லை. திரிணாமுல் கட்சி தனித்து போட்டியிட்டு 4-வது முறையாக ஆட்சி அமைக்கும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற காங்கிரஸ் உதவவில்லை என்று சில அமைச்சர்கள் கூறினர். ஹரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெற ஆம் ஆத்மி உதவவில்லை. இரு மாநிலங்களிலும் இரு கட்சிகளும் இணைந்திருந்தால் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கும் என்று மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு 2011-ம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளது.
அடுத்த ஆண்டு அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைக்காமல், மம்தா கட்சி தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.