புது டெல்லி: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (ஆதார்) தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், பள்ளிகளில் படிக்கும் 5 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பயோமெட்ரிக் விவரங்கள் கட்டாயமாக புதுப்பிக்கப்பட வேண்டும்.
இதற்காக, பள்ளிகளில் முகாம்களை ஏற்பாடு செய்வது அவசியம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையுடன் இணைந்து, ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பு பிளஸ் என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம், பயோமெட்ரிக் புதுப்பிப்பு எளிதாக்கப்பட்டுள்ளது. ஆதாரில் உள்ள மாணவர்களின் பயோமெட்ரிக் தரவின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையைப் பராமரிக்க இது முக்கியம். கிட்டத்தட்ட 17 கோடி ஆதார் எண்களின் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு நிலுவையில் உள்ளது.
மாணவர்களின் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்கத் தவறினால், பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் சலுகைகளைப் பெறுவதிலும், NEET, JEE, QUT உள்ளிட்ட தேர்வுகளை எழுதுவதிலும் சிக்கல்கள் ஏற்படும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.