புதுடில்லி: ஆந்திராவைச் சேர்ந்த காந்தியவாதி கிருஷ்ண பாரதி (92) உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ண பாரதி, சுதந்திர போராட்ட வீரர்கள் பசல கிருஷ்ண மூர்த்தி மற்றும் அஞ்ச லட்சுமி தம்பதியின் இரண்டாவது மகளாக ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தார். காந்திய கொள்கையில் தீவிர நம்பிக்கை கொண்ட இவர், வாழ்நாள் முழுவதும் அதனை கடைப்பிடித்து வந்தார். தலீத் மக்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்காக தொடர்ந்து பாடுபட்டார்.

திருமணம் செய்து கொள்ளாமல், சமூக சேவையையே தனது வாழ்க்கையின் நோக்கமாக கொண்டு வாழ்ந்த கிருஷ்ண பாரதி, வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், பிரதமர் மோடியும் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டார். அதில், “பசல கிருஷ்ண பாரதியின் மறைவு மனவேதனையை அளிக்கிறது. காந்திய கொள்கையை கடைப்பிடித்து வந்த அவர், காந்தியின் சிந்தனைகளை வழிகாட்டியாக கொண்டு தேசத்தின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். சுதந்திர போராட்ட தியாகிகளான தனது பெற்றோரின் பாரம்பரியத்தை அவர் முன்னெடுத்து சென்றுள்ளார்.
நான் பீமாவரத்தில் அவரை சந்தித்ததை நினைவுகூர்கிறேன். அவரது உளமாறும் தன்னலமற்ற பணிப்பற்றை நினைவுகொள்ளும்போது மனம் கனக்கிறது. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.