புதுடில்லி: “பண்டைய பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைப்போம்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
புதுடில்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நடந்த நிகழ்ச்சியில் பேசும் போது, பிரதமர் மோடி புதிய பார்லிமென்ட் கட்டிடத்தில் சமண மதத்தின் அடையாளங்கள் இடம்பெற்றிருப்பதை குறிப்பிட்டார். “சமண மதம் நம்மை நாமே வெல்ல ஊக்குவிக்கிறது. நான் குஜராத்தில் பிறந்தேன், அங்கு ஒவ்வொரு தெருவிலும் சமண மதத்தின் செல்வாக்கு தெரியும். சிறுவயதிலிருந்தே, நான் சமண ஆச்சார்யர்களுடன் இருந்திருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

மேலும், “நவ்கர் மகா மந்திரம் வெறும் மந்திரம் அல்ல. இந்த மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தை மட்டுமல்ல, ஒவ்வொரு எழுத்தும் ஒரு மந்திரம்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். “கடந்த ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட சிலைகள் வெளிநாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளன என்பதை அறிந்து நீங்கள் பெருமைப்படுவீர்கள்” என்று அவர் கூறினார்.
பண்டைய பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்குவது, பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைப்பது என பிரதமர் மோடி கூறினார்.