திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள வயநாடு தொகுதி எம்.பி.யான பிரியங்கா காந்தி நாளை மறுநாள் தனது சொந்த தொகுதிக்கு திரும்புகிறார். 8, 9, 10 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் தேர்தல் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும் சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் மற்றும் தொகுதி கமிட்டி பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, 8-ம் தேதி காலை 9.30 மணிக்கு மானந்தவாடியிலும், மதியம் 12 மணிக்கு சுல்தான் பத்தேரியிலும், 2 மணிக்கு கல்பேட்டையிலும் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, ஊருக்குள் அடிக்கடி வரும் வன விலங்குகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காண்பது, நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.