கேரள மாநிலம் வயநாடு பகுதிக்கு 3 நாள் பயணமாக வந்துள்ள காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். வயநாட்டில் இருந்து காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி நேற்று கண்ணூர் விமான நிலையம் வந்தார். அங்கிருந்து காரில் வயநாடு சென்றார். புல்பள்ளியில் உள்ள ஸ்ரீ சீதாதேவி லவ குசா கோவிலில் வழிபாடு செய்தார்.
சுல்தான் பத்தேரி பகுதியில் உள்ள புல்பள்ளி கிராம பஞ்சாயத்தில் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். அங்காடிசேரி பகுதியில் ஸ்மார்ட் அங்கன்வாடியை திறந்து வைத்தார். அதிரட்டுக்குன்றில் லிப்ட் பாசனத் திட்டத்தையும், இருளம் பகுதியில் தடுப்பணைத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். மேனங்கடியில் உள்ள கிராம பஞ்சாயத்து சமுதாய கூடத்தில் வனிதா சங்கத்தை துவக்கி வைத்தார்.

கல்பேட்டாவில் ஒரு பள்ளி, ஒரு விளையாட்டு திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். கல்பேட்டா எல்ஸ்டோன் தோட்டப் பகுதியில் முண்டகை – சூரல்மலா மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அபிவிருத்தி செய்யப்படவுள்ள நகரமைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். நேற்று மாலை மானந்தவாடி வள்ளியூர்காவு கோவிலில் வழிபாடு செய்தார்.