வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:- சில நாட்களுக்கு முன்பு, நான் தமிழ்நாட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு, 1,000 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பிரார்த்தனை செய்தேன்.
ராஜேந்திர சோழன் என்ற மன்னரால் கட்டப்பட்ட இந்தக் கோயில், சைவ மரபின் ஒரு பழங்கால மையமாகும். வட இந்தியாவிலிருந்து கங்கை நீரைப் பெற்று வடக்கு மற்றும் தெற்கை இணைத்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ராஜேந்திர சோழன் சிவ பக்தி மற்றும் சைவ மரபின் மூலம் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற முழக்கத்தை அறிவித்தார்.

இன்று, காசி-தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகள் மூலம் அதே கொள்கையை நாம் முன்னோக்கி எடுத்துச் செல்கிறோம். ராஜேந்திர சோழன் கங்கை நீரை எடுத்துக் கொண்டது போல, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நானும் கங்கை நீரோடு அங்கு சென்றேன்.
கங்கை நீரால் இறைவனுக்கு பூஜை செய்தேன். கங்கை அன்னையின் ஆசியுடன் மிகவும் புனிதமான சூழ்நிலையில் அங்கு பூஜை நிறைவடைந்தது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. வாழ்க்கையில் இதுபோன்ற வாய்ப்புகள் மிகுந்த உத்வேகத்தை அளிக்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.