புதுச்சேரி: வீடூர் அணையில் 3 மதகுகள் வழியாக நீர் திறக்கப்படுவதால் புதுச்சேரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணை 31 அடியை எட்டியதை அடுத்து மணிக்கு 3808 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து 2071 மூன்று மதகுகள் வழியாக திறக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது வீடூர் அணை . 89 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த அணை 1959 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் திரு காமராசர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. அணையின் மொத்த நீளம் அகலம் முறையாக 15,800 அடி மற்றும் 37 அடி ஆகும். அணையின் மொத்தக் கொள்ளளவு 32 அடியாகும். 3200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் வகையில் அமைந்துள்ள இந்த அணையின் பிரதான கால்வாய் 176 கி. மீ நீளம் கொண்டதாகும். இந்த அணை தமிழக அரசின் பொதுபணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
வீடுர் அணையானது 15,800 அடி நீளமும், 37 அடி உயரமும் கொண்டுள்ள இந்த அணையின் நீர்மட்டம் பிடிப்பு 32 அடியாகும். தற்போது 31 அடியை எட்டி உள்ளதாலும் 3808 கன அடி நீர் வரத்து உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி மூன்று மதகுகள் வழியாக 2071 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
வீடூர் அணையின் முழு கொள்ளளவான 32 அடியில், 30.300 அடி நிரம்பியுள்ளது. மேலும், நீர் வரத்து அதிகரித்து வருவதால் இன்று 22.10.2025 நன்பகல் 12.00 மணியளவில் வினாடிக்கு 500 முதல் 3,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
எனவே, சங்கராபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் குறிப்பாக, வில்லியனூர் தாலுக்காவில் இருக்கும் மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, சுத்துக்கேணி, கொடாத்தூர் (குமாரபாளையம்), (கைக்கலப்பட்டு), தேத்தம்பாக்கம் செல்லிப்பட்டு, வம்புபட்டு, பிள்ளையார்குப்பம், கூடப்பாக்கம் (கோனேரிக்குப்பம்), வில்லியனூர் (ஆரியப்பாளையம், புது நகர்- பிளாட்-II, பொறையாத்தம்மன் நகர், கோட்டைமேடு), மங்களம், உருவையாறு, திருக்காஞ்சி, ஒதியம்பட்டு மற்றும் புதுச்சேரி தாலுக்காவில் இருக்கும் NR நகர் & நோணாங்குப்த்தில் ஆற்றின் இரு கரையோரங்களில் இருப்பவர்கள், எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நேரத்தில் ஆற்றில் இறங்குவது, மீன் பிடிப்பது, விளையாடுவது, நீந்துவது, செல்ஃபி எடுப்பது போன்ற எந்த விதமான செயலிகளிலும் ஈடுபட வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.