திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள இரண்டு துவாரபாலகர் சிலைகள் 1999-ம் ஆண்டு தங்க முலாம் பூசப்பட்டவை. இந்த சூழலில், துவாரபாலகர் சிலைகளின் பீடங்கள் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, செப்டம்பர் 17-ம் தேதி, கேரள உயர் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, கட்டுமானப் பணிகளைப் பொறுப்பேற்ற பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போர்த்தி மீது கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, திருவிதாங்கூர் தேவசம்போர்டு (TDB) 2 நாள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. அதன் பிறகு, சபரிமலையில் உள்ள சொத்துக்களை மதிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. இதற்கிடையில், தங்க முலாம் பூசப்பட்ட பீடத்தைக் கண்டுபிடிக்க ஐயப்பன் கோயில் தேவசம்போர்டு ஊழல் தடுப்புப் பிரிவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தேவசம்போர்டு நடத்திய விசாரணையில் தங்க முலாம் பூசப்பட்ட பீடம் மீட்கப்பட்டது. உயர் நீதிமன்ற விசாரணையில், துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட பீடம் காணாமல் போனது தெரியவந்தது. மொத்தம் 4 கிலோ தங்கம் காணாமல் போயுள்ளது. இது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரித்து வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி. ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:- தங்கம் திருடப்பட்ட சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி அடுத்த 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், துவாரபாலகர் சிலை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் கொண்டு வர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.