பீகார்: பீகார் தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி, ஜேடியு-பாஜக கூட்டணி மற்றும் ஜான் சூரஜ் இடையே மும்முனைப் போட்டி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கூடுதலாக, தேசிய ஜனநாயக கூட்டணியிடம் சரணடைந்த நிதிஷ் குமார், தனது முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், ஜனதா தள ஐக்கிய தலைவர் நிதிஷ் குமார் தனது X தளத்தில், “சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பீகாரில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 400 லிருந்து ரூ. 1,100 ஆக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஓய்வூதிய அதிகரிப்பு ஜூலை முதல் அமலுக்கு வரும். இந்தத் தொகை ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதி அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

இது 1 கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து 255 பயனாளிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.” மேலும், முதியவர்கள் சமூகத்தின் மதிப்புமிக்க பகுதியாக உள்ளனர். அவர்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதே எங்கள் முதன்மை நோக்கம். மாநில அரசு இந்த திசையில் தொடர்ந்து பயணிக்கும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று பீகாரின் சிவானில் நடைபெற்ற அரசு நலத்திட்டத்தில் பங்கேற்றார். அப்போது, கட்டாச்சியை (லாலுவின் ஆட்சி) அகற்றிய பீகார் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்ததாக அவர் கூறியிருந்தார். இதன் காரணமாக, பீகார் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.