புதுடில்லி: நாட்டின் முக்கிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத் தேர்வின் 2ம் கட்ட முதல்நிலை முடிவுகள் இன்று (ஏப்ரல் 19) வெளியானது. இந்த தேர்வில் 24 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜே.இ.இ. 2ம் கட்ட தேர்வு ஏப்ரல் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெற்றது. சுமார் 8 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்றனர். தேர்வர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான https://jeemain.nta.ac.in இல் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
முழு மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்தவர்களில் சிலர்: எம்.டி. அனஸ், ஆயுஷ் சிங்கால், அர்ச்சிஸ்மேன் நந்தி, மாஜ்ஹி, ஆயுஷ் ரவி சவுத்ரி மற்றும் சர்மா. இவர்களுடன், குஷாக்ர குப்தா, ஹர்ஷ் குப்தா, ஆதித் பிரகாஷ், தக்ஷ், ஹர்ஷ் ஜா, ரஜித் குப்தா மற்றும் ஷ்ரேயாஸ் லோஹியா உள்ளிட்ட மாணவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், சாக்ஷாம் ஜிண்டால், சவுரவ், அஜய் ரெட்டி, சானித்யா, விஷத் ஜெயின், அர்னவ் சிங், விகாஸ் தோஷ்னிவால், பைங்காஹா, சாய் மனோக்னா, ஓம் பிரகாஷ் மற்றும் பானி பிராட்டா மஜீ ஆகியோரும் 100 சதவீத மதிப்பெண்களை பெற்று, நாட்டின் கல்விச்சரித்திரத்தில் தங்கள் பெயரை பொறித்துள்ளனர்.
இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றோம். இவர்களது முயற்சியும் உறுதியும் இந்தியாவின் எதிர்காலத்துக்கான உறுதியான அடிப்படையாக அமையும்.