
பாட்னா: இன்று காலை டெல்லியில் இருந்து ஷில்லாங்கிற்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் பாட்னாவுக்கு திருப்பி விடப்பட்டது. இதனையடுத்து இன்று காலை 8.52 மணியளவில் பாட்னாவின் ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானியின் விரைவான நடவடிக்கையால், விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும், அவர்களை வேறு விமானத்தில் அழைத்துச் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பாட்னா விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார்.