புது டெல்லி: மே 19, 2023 அன்று, அதிக மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. பொதுமக்கள் அந்த நோட்டுகளை வங்கிகளுக்கு திருப்பி அனுப்பினர். அந்த நேரத்தில், புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடி. அதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி நிலவரப்படி, 98.24 சதவீத நோட்டுகள் திரும்பி வந்தன.

ரூ.6,266 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படவில்லை. மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் 98.24 சதவீதம் திரும்பப் பெறப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிக் கிளைகளில் டெபாசிட் செய்ய அல்லது மாற்றிக்கொள்ளும் வசதி அக்டோபர் 7, 2023 வரை அனைத்து வங்கிக் கிளைகளிலும் இருந்தது.
அதன் பிறகு, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் அவற்றை மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.