அமராவதி சட்டப்பேரவையில் சட்டம்-ஒழுங்கு குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:- முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் விஜயவாடாவில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் மீது ஒய்எஸ்ஆர் காங்கிரஸார் தாக்குதல் நடத்தினர். ஆனால் அப்போதைய அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜனநாயக நாட்டில் எந்த கட்சி அலுவலகமும் தாக்கப்படவில்லை.
ஆனால் அது நடந்தது ஜெகன் ஆட்சியில். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. சிலர் கஞ்சா மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். இதை முற்றிலுமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ‘ஈகல்’ என்ற போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தால் சட்டம் ஒழுங்கு கண்டிப்பாக கட்டுக்குள் இருக்க வேண்டும்.

ரவுடிகளின் அராஜகத்தை இப்போது பொறுத்துக்கொள்ள முடியாது. கடந்த ஆட்சி வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை கூட விட்டு வைக்கவில்லை. அதையும் ஆக்கிரமித்தார்கள். ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணித்து வருகிறோம். இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் கடுமையான தண்டனை நிச்சயம் வழங்கப்படும். எனது அரசியல் வாழ்க்கையில் பழிவாங்கும் படலம் இருக்காது. 26 மாவட்டங்களிலும் சைபர் பாதுகாப்பு அலுவலகங்கள் அமைக்கப்பட்டு சைபர் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.