கோட்டயம்: மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு படிக்கும் திருநங்கை மாணவர்கள் நீண்ட காலமாக தனி விடுதி கோரி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் மாநிலத்தில் முதல் முறையாக திருநங்கை மாணவர்களுக்காக தனி விடுதி கட்டப்பட்டுள்ளது.

இதை நேற்று முன்தினம் மாநில சமூக நீதி அமைச்சர் ஆர். பிந்து திறந்து வைத்தார். ஒரு திருநங்கை மாணவி கூறுகையில், “எங்களுக்கு தங்குவதற்கு வாடகை வீடுகள் கிடைப்பது கடினம். நாங்கள் அவற்றைப் பெற்றாலும், வாடகை அதிகமாக உள்ளது.
இப்போது தனி விடுதி திறக்கப்பட்டுள்ளது, இது ஒரு ஆசீர்வாதம்.”