இந்தியாவில் மாம்பழ சீசன் உச்சத்தில் இருக்கும் போது, அமெரிக்கா கடந்த சில நாளாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மாம்பழங்களை நிராகரித்து வருகிறது. அமெரிக்கா 15 ஷிப்மென்டுகளை $500,000 (ரூ.4.28 கோடி) மதிப்பில் ஏற்க மறுத்துள்ளது. இந்த நிராகரிப்பு காரணமாக இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரும் கவலையில் உள்ளனர். அமெரிக்க அதிகாரிகள், இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட மாம்பழங்களில் ஆவணப்படுத்துதல் செயல்பாட்டில் பிழைகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

அதன்பின், நிராகரிக்கப்பட்ட மாம்பழங்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பவோ அல்லது அழிக்கவோ அதிகாரிகள் அறிவுறுத்தினர். மாம்பழங்கள் சீடிப்பதனால், அனைத்து ஏற்றுமதியாளர்களும் அழிப்பதற்கான தீர்மானம் எடுத்துள்ளனர். மேலும், irradiation எனப்படும் கட்டாயமான கதிர்வீச்சு சிகிச்சை தொடர்பான ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த irradiation என்பது உணவுப் பொருட்களில் உள்ள பாக்டீரியா மற்றும் பூச்சிகளை அழித்து அவற்றின் ஆயுளை நீட்டிக்க ionising கதிர்வீச்சை பயன்படுத்தும் ஒரு தொழில்நுட்பமாகும். இந்தியாவின் நவி மும்பையில் இந்த irradiation நடைமுறை நடைபெறுகிறது மற்றும் USDA அதிகாரிகள் இதை கண்காணிக்கின்றனர்.
அமெரிக்காவிற்கு மாம்பழ ஏற்றுமதிக்கு PPQ203 படிவம் அவசியம். இதற்கு சான்று அளிக்கும் USDA அதிகாரி, நடைமுறை சரியாக நடைபெற்று வருகிறது என்றும், படிவம் இல்லாமல் ஏற்றுமதி கூட அனுமதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.
தற்போது, இந்த ஆவண பிழைகள் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்ஸிஸ்கோ மற்றும் அட்லாண்டா விமான நிலையங்களில் வரும் மாம்பழங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மே 8, 9 ஆகிய நாட்களில் irradiation நடைமுறை செய்யப்பட்ட மாம்பழங்கள் இதில் அடக்கம்.
இந்தத் தடைகள் APEDA மற்றும் அமெரிக்க வேளாண்மைத் துறை APHIS ஆகியவற்றின் கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களுக்கு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவு மற்றும் தரம் பாதுகாப்பு முறைகள் குறித்து மேலதிக கலந்துரையாடல் தேவையாகியுள்ளது.