கோடையில் அதிகம் விரும்பப்படும் பழங்களில் பப்பாளி முக்கியமானது. ஆனால் சந்தையில் பலர் செயற்கையாக கெமிக்கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பப்பாளி பழங்களை விற்பனை செய்கிறார்கள். இது சத்துக்களை குறைத்தே தவிர, உடல்நலத்திற்கும் தீங்கிழைக்கும்.இயற்கையாக பழுத்த பப்பாளிக்கு மென்மையான மஞ்சள் அல்லது ஆரஞ்சு தோல் இருக்கும்.

சிறு பச்சை புள்ளிகள் காணப்படும். செயற்கை முறையில் பழுக்க வைத்த பப்பாளிக்கு அதிக பிரகாசம் மற்றும் சீரற்ற நிறம் இருக்கும். வாசனைவும் முக்கியமான அறிகுறி. இயற்கை பப்பாளிக்கு இனிப்பு வாசனை வரும். செயற்கை பப்பாளி வாசனை இல்லாமல் இருக்கும்.
உறுதி தன்மையும் பார்ப்பதற்கு முக்கியம். இயற்கையானது மென்மையாக இருக்கும், ஆனால் ஒரே பழத்தில் பாகம் பாகமாக மாறுபட்ட மென்மை இருந்தால் அது போலியானதாக இருக்கலாம். வெட்டிப் பார்க்கும் போது இயற்கை பப்பாளி ஆழமான ஆரஞ்சு அல்லது சிவப்பு நிற சதை, சமமாக பழுத்த விதைகள் கொண்டிருக்கும். போலியானவை சீரற்ற நிறங்களும் முற்றாத விதைகளும் கொண்டிருக்கும்.
மிதவை சோதனை செய்து பார்க்கலாம். இயற்கை பப்பாளி தண்ணீரில் நெளியாமல் மெதுவாக மூழ்கும். போலியானது மிதக்கும். பாதுகாப்பான முறையில் வீட்டிலேயே பழுக்க வைக்கலாம். பப்பாளியை பேப்பர் பையில் வைத்து ஒரு பழுத்த வாழைப்பழத்துடன் வையுங்கள். இது இயற்கையாக பழுக்க உதவும்.கால்சியம் கார்பைடு போன்ற ரசாயனங்கள் சுவாசிக்கப்பட்டால் தலைவலி, தோல் பிரச்சனை, மனநிலை மாற்றம் மற்றும் புற்றுநோய்க்கு காரணமாகலாம். எனவே எப்போதும் நம்பகமான இடங்களில் இருந்து மட்டுமே பப்பாளி வாங்கவும். உங்கள் உடல்நலத்தை பாதுகாக்க இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்.